முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்திருப்போர் கவனத்துக்கு..

வழிப்பறி, கொலை, கொள்ளை என நாள்தோறும் திருடர்கள் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். எவ்வளவுதான் விழிப்போடு இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Updated On : 25 அக்டோபர், 2018 at 3:42 PM
பகிர்:

சென்னை: வழிப்பறி, கொலை, கொள்ளை என நாள்தோறும் திருடர்கள் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். எவ்வளவுதான் விழிப்போடு இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் எதற்கு சம்பந்தமே இல்லாமல் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்திருப்போருக்கு சொல்கிறோம் என்று நீங்கள் புருவத்தை உயர்த்தலாம்.

விஷயம் இருக்கிறது, சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞரை, திருமண வரன் தேடும் இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்வதாகக் கூறி பேசிய பெண், தனது குடும்பத்தார் இளைஞரைப் பார்க்க விரும்புவதாகக் கூறி அழைத்து, அவரிடம் இருந்த செல்போன், ஏடிஎம் அட்டை, தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

Advertisement

அதாவது, காளிசரண் (42) என்பவர் திருமண வரன் தேடும் இணையதளத்தில் தனது தகவல்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு பெண் காளிசரணை தொடர்பு கொண்டு தனது குடும்பத்தார் காளிசரணை நேரில் பார்க்க விரும்புவதாகக் கூறி ஒரு முகவரியைக் கொடுத்து அங்கு வருமாறுக் கூறியுள்ளார்.

அந்த முகவரி ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்ட். அங்கு காளிசரண் சென்ற போது ஒரு பெண்ணும், 43 ஆண்களும் இருந்துள்ளனர். அவர்கள் அப்பெண்ணின் உறவினர்கள் என முதலில் காளிசரண் நினைத்துள்ளார். பிறகுதான், அவர்கள் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டார். கத்தி முனையில் காளிசரணிடம் இருந்து பணம், நகை, ஏடிஎம் அட்டையைப் பிடுங்கிக் கொண்டனர். மிரட்டி ஏடிஎம்-மின் பின் எண்ணையும் வாங்கியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.