சிறப்புக் கட்டுரைகள்

தனிப்பட்ட ஒரு குற்றத்துக்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

தினமணி


புது தில்லி: சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரி பல உயர் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ஃபேஸ்புக் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தனிப்பட்ட ஒரு குற்றத்துக்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என்ற கேள்வி எழுப்பியதோடு, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு டிவிட்டர், கூகுள், யூடியூப், மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு குற்றங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ஃபேஸ்புக் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் உண்மைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பயனாளிகளின் விவரங்களுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT