10ம் வகுப்பு தேர்வு: மாநில அளவில் 2ம் இடம் பெற்ற சிதம்பரம் மாணவி எஸ்.பூஜா
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பூஜா 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பூஜா 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் இவர் கடலூர் மாவட்டத்திலும், சிதம்பரம் நகரத்திலும், பள்ளியிலும் முதலிடம் பெற்றுள்ளார்.
சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.பூஜா பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
அவரது மதிப்பெண்கள் தமிழ்-98, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100.
மாணவியின் தந்தை பெயர் ஏ.செல்வக்குமார், தாயார் ஜி.சக்தி. ஜி.சக்தி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வராக பணியாற்றுகிறார்.
Advertisement