கனரா வங்கியுடன் கலசலிங்கம் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்.கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக கனரா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
கல்விகனரா வங்கியுடன் கலசலிங்கம் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்.கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக கனரா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக கனரா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.துணை வேந்தர் ச.சரவணசங்கர் வாழ்த்துரை வழங்கினார்.கனரா வங்கியின் மதுரை கோட்ட துணைப் பொது மேலாளர் ஜி.ராஜேந்திரன், கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கியின் மேலாளர் இளங்கோ, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.