கல்வி

பி.இ.: பிற மாநில மாணவர்கள் 36 பேர் சேர்க்கை

DIN

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூலை 17 இல் தொடங்கிய இந்த சேர்க்கை ஆகஸ்ட் 11-இல் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், பிற மாநில மாணவர்களை தமிழக கல்லூரிகளில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவர்களுக்கென 100 பி.இ. இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் 52 பேர் சேர்க்கைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 36 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT