கல்வி

பத்தாம் வகுப்பு: அறிவியல் செய்முறைத் தேர்வில் தவறியோருக்கு சிறப்புத் தேர்வு

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறிய மாணவர்களுக்கு ஜூன் 22, 23 ஆகிய இருநாள்களில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகை புரிந்து, ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ள தவறிய பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் வரும் வியாழக்கிழமை (ஜூன் 22), வெள்ளிக்கிழமை (ஜூன் 23) ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ள சிறப்புத் துணைப் பொதுத் தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இது குறித்த முழு விவரங்களையும் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். மேலும் தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு இது குறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்படாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT