முதுநிலை மருத்துவப் படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மே 22, 23 ஆகிய தேதிகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 24 இடங்கள் நிரம்பின. ஒட்டுமொத்த கலந்தாய்வு முடிவில் மொத்தம் 50 இடங்கள் நிரம்பியுள்ளன.
மீதம் உள்ள இடங்களுக்கு...: முதற்கட்ட கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதம் உள்ள முதுநிலை மருத்துவ இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (மே 24) முதல் மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.