கைத்தறி-துணி நூல், சிறைத் துறை உயரதிகாரிகள் பதவி: டிஎன்பிஎஸ்சி பட்டியல் வெளியீடு
கைத்தறி மற்றும் துணிநூல், சிறைத்துறை உயரதிகாரிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல், சிறைத்துறை உயரதிகாரிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்துக்கு கடந்த ஆகஸ்ட்டிலும், சிறை அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களிலும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வுகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.