முகப்பு
தேர்தல் செய்திகள்

சென்செக்ஸ் 3500 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்கள்!

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டியின் மதிப்புகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

Updated On : 4 ஜூன் 2024, 11:35 am IST
பகிர்:

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், முடிவுகள் குறித்து நிலையான ஊகத்திற்கு வர முடியாததால், தேசிய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இறக்கத்துடன் துவங்கிய இன்றைய பங்குச்சந்தை தற்போது சென்செக்ஸில் 3485 புள்ளிகளை இழந்து 72275.46- இறக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், நிஃப்டி 1016.32 புள்ளிகளை இழந்து 22133.12-ல் தடுமாறி வருகிறது. (11.30) நிலவரப்படி)

Advertisement

Advertisement

இதனால், பல நிறுவனப் பங்குகளில் விலையும் வீழ்ச்சியடைந்து வருவதால் பல முதலீட்டாளர்கள் குறைவான விலைக்கு பங்குகளை வாங்கிக் குவிக்கின்றனர்.

மேலும், இன்றைய பங்குச்சந்தை முடிவில் 4000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments