தேர்தல் செய்திகள்

சென்செக்ஸ் 3500 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்கள்!

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டியின் மதிப்புகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

DIN

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், முடிவுகள் குறித்து நிலையான ஊகத்திற்கு வர முடியாததால், தேசிய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இறக்கத்துடன் துவங்கிய இன்றைய பங்குச்சந்தை தற்போது சென்செக்ஸில் 3485 புள்ளிகளை இழந்து 72275.46- இறக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், நிஃப்டி 1016.32 புள்ளிகளை இழந்து 22133.12-ல் தடுமாறி வருகிறது. (11.30) நிலவரப்படி)

இதனால், பல நிறுவனப் பங்குகளில் விலையும் வீழ்ச்சியடைந்து வருவதால் பல முதலீட்டாளர்கள் குறைவான விலைக்கு பங்குகளை வாங்கிக் குவிக்கின்றனர்.

மேலும், இன்றைய பங்குச்சந்தை முடிவில் 4000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT