தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!
சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்..
தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கடந்த மார்ச் 30 முதல் தேர்தல் களம் காணும் வேட்பாளர்கள் பலரும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக வேட்பாளர் சீமான் உள்பட பலர் முதல் நாளே தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
Advertisement
இந்த நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று (ஏப்ரல் 6) கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் பலரும் ஆர்வத்துடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன்படி, தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி ஆயிரக்கணக்கானோருடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
summary