வேலைவாய்ப்பு

நர்சிங், பார்மசி முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

தினமணி


இந்திய ராணுவத்தின் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான எஸ்எஸ்பி என அழைக்கப்படும் சாஸ்திரா சீமா பல் (Sashastra Seema Bal) படைப்பிரிவில் காலியாக உள்ள 181 சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள் தரத்திலான துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்தம் காலியிடங்கள்: 181 

காலியிடங்கள் விவரம்: 
1. நர்சிங் படித்த பெண்கள் - 23 (சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலானது பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்)
2. பார்மசிஸ்ட்  - 18 (உதவி சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலானது)
3. ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன் - 02 
4. டென்டல் டெக்னீசியன் - 02 
5. ரேடியோகிராபர் - 08 
6. ஸ்டெனோகிராபர் - 54
7. ஹெட்கான்ஸ்டபிள் - 74 

தகுதி: பிளஸ்-2 படிப்புடன் ஜெனரல் நர்சிங், பார்மஸி, ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன், டென்டல் ஹைஜீனிஸ்ட், ரேடியோ டயக்னாஸிஸ் டிப்ளமோ, ஸ்டெனோகிராபர் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 09.09.2018 தேதியின்படி ஒவ்வொரு பிரிவு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssbrectt.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT