வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் தீயணைப்பு வீரர், ஓட்டுநர் பணி

தினமணி

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள "குரூப் சி" பணியிடங்களான தீயணைப்பு வீரர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Fire Engine Driver
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.21,700
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Fire man
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி, தீயணைப்பு உபகரணங்களை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும். சிவில் மற்றும் ராணுவ துறைகளில் தீயணைப்பு வீரராக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_11_0070_1718b.pdf என்ற ஆன்லைன் அறிவிப்பு லிங்கில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 898 AT Bn Asc, PIN- 905 898, C/O 56 APO

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.03.2018

மேலும் விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT