வேலைவாய்ப்பு

பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களுக்கு செயில் நிறுவனத்தில் வேலை

தினமணி


இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உருக்கு ஆலை அமைத்து செயல்பட்டு வரும் செயில் நிறுவனத்தின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஆலையில் காலியாக உள்ள 205 அதிகாரி மற்றும் அலுவலக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேகப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 205

பதவி: ஜூனியர் மேனேஜர் - 7
பதவி: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் - 170 
பதவி: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர் ஆபரேட்டர்) - 28 

தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக். பட்டப்படிப்புடன், முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் ஜூனியர் மேனேஜர் பணிக்கும், கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பவர்பிளான்ட், புரொடக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒடியா மொழியறிவு பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு: 4.12.2018 தேதியின்படி 28, 30 வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ஜூனியர் மேனேஜர் பணிக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர்கள் ரூ.500, டெக்னீசியன் மற்றும் பாய்லர் ஆபரேட்டர் பணிகளுக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.sail.com  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள https://www.sailcareers.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

ஸ்ரீவிக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு முகாம்: 282 போ் தோ்வு

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் நிறுவனா் தின விழா

தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT