வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பரோடா வங்கியில் அதிகாரி வேலை

பரோடா வங்கியில் காலியாக உள்ள 25 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகள், பொறியியல் துறை

ஆர். வெங்கடேசன்



பரோடா வங்கியில் காலியாக உள்ள 25 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகள், பொறியியல் துறை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 25

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Data Analyst - 04
பணி: Data Manager - 02
பணி: Data Engineer - 04
பணி: Business Analyst - 02
பணி: Mobility & Front End Developer - 06
பணி: Integration Expert - 02
பணி: Emerging Technologies Expert - 04
பணி: Technology Architect - 01

தகுதி: கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ முடித்தவர்கள், பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 5,6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: வங்கி விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bankofbaroda.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/new-detailed-adv-baroda-sun-technologies.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT