வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்திற்கு விண்ணப்பிக்கவும்!

தினமணி

அனைவராலும் ஈஎஸ்ஐ என அழைக்கப்படும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தில் அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் 

பணி: STENOGRAPHER
காலியிடங்கள்: 20
பணியிடம்: சென்னை 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் 
சம்பளம்: மாதம் ரூ. 25,500 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கணினித் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பணி: UPPER DIVISION CLERK 
காலியிடங்கள்: 131 
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு; 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும் 
சம்பளம்: மாதம் ரூ. 25,500 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, 2-வது நிலைத் தேர்வு, கணினி திறன் தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.esic.nic.in/recruitment என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT