வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தினமணி


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு மதுரை அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Tyreman, Blacksmith, Staff Car Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 04 

பணி: Tyreman - 01

பணி: Blacksmith - 01

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த பணிப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

வயது வரம்பு:  01.07.2021 தேதியின்படி 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பணி: Staff Car Driver - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

வயது வரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கு முறை: www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து பதிவு தபால் அல்லது விரைவுத் தபால் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராகவோ அல்லது UCR Receipt ஏதாவது ஒரு தபால் அலுவலகத்தில் ஆக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, Mail Motor Service, Madurai 625002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT