வேலைவாய்ப்பு

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா..?

தினமணி


தமிழக அரசிற்கு உள்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் , கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கிராமங்களில், ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகம்

பணி: கிராம உதவியாளர் 

காலியிடங்கள்: 19

தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.11,100 - ரூ.35,100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

வயது வரம்பு : 21 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுய சான்று விவரங்களுடன், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய www.nagapattinam.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Regional Head, Kilvelur Taluk Office, Nagapattinam-611104. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 09.09.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT