தமிழக அரசின் வழக்காடல் துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: Tamilnadu Litigation Department
மொத்த காலியிடங்கள்: 16
பணியிடம்: சென்னை மற்றும் மதுரை
பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.06.2020 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயது மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவினர் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ரூ.45 அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறையுடன் "அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை-600 104"
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.