வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 8500 எம்டிஎஸ் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.  

தினமணி


மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. 

பணி: Multi Tasking Staff (MTS)

காலியிடங்கள்: 8.500

சம்பளம்: ஏழாவது சம்பளக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி நடத்து எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2021

மேலும் எழுத்துத் தேர்வு, வயதுவரம்பு சலுகை போன்ற விரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_05022021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கம்: துா்காபூா் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது!

வைகை அணை பகுதியில் நாளை மின்தடை

அனைத்து அவசர உதவிக்கும் 108-ஐ அழைக்கலாம்: தீபாவளி முன்னெச்சரிக்கையாக அரசு நடவடிக்கை!

மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 3 போ் கைது

பள்ளி சமையலறை பூட்டை உடைத்து திருட்டு: 2 போ் கைது

SCROLL FOR NEXT