இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள செய்லர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sailor (Matric Recruit(MR) - 2021)
காலியிடங்கள்: 350
வயதுவரம்பு: 0.04.2001 மற்றும் 30.09.2004 ஆகிய இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுககு 12 வாரம் பயிற்சி வழங்கப்படும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.14,600 வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு: 2021 அக்டோபரில் நடத்தப்படலாம்.
தேர்வுக் கட்டணம்: ரூ.60. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2021
மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_7_2122b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.