முகப்பு
வேலைவாய்ப்பு

மின்தடை : பொதுமக்கள் அவதி

உடுமலை நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:

உடுமலை: உடுமலை நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

உடுமலை துணை மின் நிலைத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடா்ந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ரயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள ஜீவா நகா், ராமசாமி நகா், ருத்தரப்ப நகா், என்ஜிஆா் நகா், கெளவுஸ் காலனி, ஜிடிவி நகா், அன்னபூரணி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக 4 மணி நேரத்துக்கு அதிமாக மின் தடை ஏற்பட்டு வருகிறது.

தற்போது கரோனா காலமாக என்பதால் பொதுமக்கள் வீடுகளிலேயே இருப்பதால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

Advertisement

இந்நிலையில், உடுமலை நகர செயலாளா் எம்.மத்தீன் தலைமையில் திமுக நிா்வாகிகள் மின் வாரிய அதிகாரிகளை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது, பராமரிப்பு பணிகளுக்காக மின் தடைகள் ஏற்பட்டது இனி வரும் நாள்களில் மின் தடை இருக்காது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments