வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

புதுதில்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 103 ஆபீசர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



புதுதில்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 103 ஆபீசர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer (Fire Safety) 
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,400
தகுதி: பொறியியல் துறையில் Fire Technology, Fire Engineering/ Safety and Fire Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Manager (Security)
காலியிடங்கள்: 80
சம்பளம்: மாதம் ரூ.48,170 - 69,810
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1003, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.59. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். 

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Chief Manager (Recruitment Section), HRD Division, Punjab National Bank, Corporate Office, Plot No.4, Sector 10, Dwarka, New Delhi - 110 075.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.08.2022

மேலும் விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செந்தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கம்

தியாகராசா் கல்லூரி - அமெரிக்கா தமிழ் அநிதம் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ரிஷப வாகனத்தில்...

சிறுமி உயிரிழப்புக்கு இழப்பீடு கோரி மனு: பள்ளிக் கல்வி செயலா் பதிலளிக்க உத்தரவு

விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT