வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 400 காலியிடங்கள்

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 400 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.

தினமணி



இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 400 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத இளநிலைப் பட்டதாரிகள் ஆன்லைனில் விரைந்து விண்ணப்பிக்கவும். 


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Junior Executive(Air Traffic Control)

காலியிடங்கள்: 400

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 14.07.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: இயற்பியல் அல்லது கணிதப் பாடப்பிரிவை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்சி பட்டம் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.81 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: விமான நிலையங்கள் ஆணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, ஐசிஏஓ மொழித் தேர்வு திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தனூா் அணையில் 6000 கன அடி தண்ணீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தில்லி அரசு முன்னுரிமை: ரேகா குப்தா

பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மருதம் பட்டையின் மகத்துவம் என்ன?

SCROLL FOR NEXT