வேலைவாய்ப்பு

நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... எங்கே? எப்போது? எப்படி?

பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள  செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள  செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும், 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளம்பர எண்.140

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Nursing Staff
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: GNM அல்லது பி.எஸ்சி நர்சிங் படிப்புடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Staff Nurse
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: GNM அல்லது பிஎஸ்சி நர்சிங்க் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் தங்களது படிப்பை மத்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Chittaranjan National Cancer Institute(CNCI), Kolkata - 700 156.

நேர்முகத் தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:  Senior Nursing Staff பணிக்கு 07.06.2022 மற்றும் Staff Nurse பணிக்கு 09.06.2022 நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT