இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா?- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
உதவி ஆணையர், இந்து சம்ய அறநிலைத்துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் 631 501
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022
மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/126/document_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.