வேலைவாய்ப்பு

சிறை அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தினமணி


தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர்(ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: சிறை அலுவலர்(ஆண்கள்)  - 6

பதவி: சிறை அலுவலர்(பெண்கள்) 2

சம்பளம்: மாதம் ரூ.38,900 - 1,35,100

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயவரம்பு இல்லை. ஏனையோர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 22.12.2022 முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை தாள்-1க்கான தேர்வும்,  பிற்பகல் 2.30 முதல் 5.30 வரை தாள்-2க்கான தேர்வும் நடைபெறும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/Jailor%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT