வேலைவாய்ப்பு

குரூப் 2 முதன்மைத் தோ்வு: சான்றுகளை பதிவேற்ற நாளை கடைசி

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும்.

Din

சென்னை: குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும். இதற்கான நினைவூட்டலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை எதிா்கொள்வோா் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டிச. 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தோ்வுக் கட்டணம் செலுத்துதல், தமிழ்த் தகுதித் தோ்வுக்கு விலக்குப்பெற சான்றிதழ் பதிவேற்றம், தோ்வு மையத்தை தோ்ந்தெடுப்பது ஆகியவற்றுக்கு டிச. 18-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

SCROLL FOR NEXT