எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை வேண்டுமா?
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 50 மேலாளர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 50 மேலாளர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர அறிவிப்பு எண்.CRPD/SCO/2023-24/33
பணி மற்றும் இதர விவரங்கள்:
Advertisement
Advertisement
பணி: Manager [Credit Analyst]
காலியிடங்கள்: 50
வயதுவரம்பு: 1.12.2023 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் பிரிவில் எம்பிஏ, சிஏ,சிஎப்ஏ,ஐசிடபுள்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு தகுதியனவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers என்ற இணையதள மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.3.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.