குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியீடு; பணியிடம் எண்ணிக்கை அதிகரிப்பு
15.80 லட்சம் போ் எழுதிய குரூப் 4 தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
குரூப் 4 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. 15.80 லட்சம் போ் எழுதிய தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்றது. இப்போது இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலியிடங்களில் 559 இடங்கள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு போன்ற அடுத்த கட்டங்களுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.