குரூப் 4 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. 15.80 லட்சம் போ் எழுதிய தோ்வின் முடிவுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்றது. இப்போது இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலியிடங்களில் 559 இடங்கள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரித்துள்ளது.
தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு போன்ற அடுத்த கட்டங்களுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.