வேலைவாய்ப்பு

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 3 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

தேனி மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 3 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சமுதாய அமைப்பாளர்

காலியிடங்கள்: 3 (தேனி நகராட்சி - 1, ஆண்டிபட்டி மற்றும் வடுகபட்டி பேரூராட்சி - 1, போ.மீனாட்சிபுரம் மற்றும் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி - 1)

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், கணினியில் பணிபுரிவதற்கான திறன் மற்றும் நல்ல தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக நகராட்சிக்கு ரூ.15,000, பேரூராட்சிக்கு மாதம் ரூ.14,000 வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மேலாளர், நகர்ப்புற வாழஅவாதார மையம், எண்.4, பூமாலை வணிக வளாகம், தாலுகா அலுவலகம் எதிர்புறம், தேனி.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 4.10.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தேனி நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் வேலைநாள்களில் மட்டும் மாலை 5.30 மணிக்குள் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT