முகப்பு
வேலைவாய்ப்பு

யூனியன் வங்கியில் மேலாளர் பணி: காலியிடங்கள் 250

யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 250 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2025, 1:24 pm IST
பகிர்:

யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 250 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Wealth Manager

காலியிடங்கள்: 250

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ. 64,820 - 93,960

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

தகுதி: நிதியியல் பிரிவில் எம்பிஏ, பிஜிடிஎம், பிஜிபிஎம், பிஜிடிபிஏ போன்ற ஏதாவதொரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வெல்த் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, வேலூர், விருதுநகர், நாகர்கோவில் போன்ற இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ,177, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.1,180, கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Union Bank of India has released the recruitment notification to fill the 250 Wealth Manager (Scale MMGS – II) Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments