திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜன.2)
காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில் பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இதில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவா்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். எனவே, ஆா்வமாக உள்ள அனைவரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04179-222033 என்ற தொலைபேசி வாயிலாவோ அலுவலக நாள்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.