மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) 
வேலைவாய்ப்பு

தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுதில்லி மாநில காவல் துறையில் நிரப்பப்பட உள்ள தலைமைக் காவலர்கள் பணிகள் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி மாநில காவல் துறையில் நிரப்பப்பட உள்ள தலைமைக் காவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்பு எண்.: HQ - C-3022/01/2025/C-3

மொத்த காலியிடங்கள்: 552

பணி: Head Constable (Wireless Operator & Teleprinter)

1. Head Constable (AWO/TPO)-Male (Open) – 285

2. Head Constable (AWO/TPO)-Male (Ex-SM) – 49

3. Head Constable (AWO)/(TPO)-Male (Departmental) – 36

4. Head Constable (AWO/TPO)-Female (Open) – 163

5. Head Constable (AWO/TPO)-Female (Departmental) – 19

சம்பளம்: மாதம் ரூ.25,500- 81,100

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்குஅரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

தகுதி: கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanic-cum-Operator, Electronic Communication System பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் 15 நிமிடத்தில் 1000 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள் 1600 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 5 நிமிடங்களிலும் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) சாதாரண நிலையில் 81 செ.மீ. அகலமும் 5 செ.மீ. விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்எஸ்சி நடத்தும் உடற்திறன் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் உடற் தகுதி, உடன்திறன் தகுதி, மருத்துவத்தகுதி மற்றும் எஸ்எஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், தூத்துக்குடி, கரூர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2025 அல்லது ஜனவரி 2026. எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.10.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

The Staff Selection Commission will conduct an open competitive examination for recruitment of Head Constable (Assistant Wireless Operator (AWO)/Tele-Printer Operator (TPO)) in Delhi Police. Candidates from all parts of the country will be eligible to apply.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

SCROLL FOR NEXT