தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதுதில்லி மாநில காவல் துறையில் நிரப்பப்பட உள்ள தலைமைக் காவலர்கள் பணிகள் தொடர்பாக...
புதுதில்லி மாநில காவல் துறையில் நிரப்பப்பட உள்ள தலைமைக் காவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்பு எண்.: HQ - C-3022/01/2025/C-3
மொத்த காலியிடங்கள்: 552
Advertisement
Advertisement
பணி: Head Constable (Wireless Operator & Teleprinter)
1. Head Constable (AWO/TPO)-Male (Open) – 285
2. Head Constable (AWO/TPO)-Male (Ex-SM) – 49
3. Head Constable (AWO)/(TPO)-Male (Departmental) – 36
4. Head Constable (AWO/TPO)-Female (Open) – 163
5. Head Constable (AWO/TPO)-Female (Departmental) – 19
சம்பளம்: மாதம் ரூ.25,500- 81,100
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்குஅரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.
தகுதி: கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanic-cum-Operator, Electronic Communication System பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் 15 நிமிடத்தில் 1000 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: ஆண்கள் 1600 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 5 நிமிடங்களிலும் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) சாதாரண நிலையில் 81 செ.மீ. அகலமும் 5 செ.மீ. விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்எஸ்சி நடத்தும் உடற்திறன் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் உடற் தகுதி, உடன்திறன் தகுதி, மருத்துவத்தகுதி மற்றும் எஸ்எஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், தூத்துக்குடி, கரூர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2025 அல்லது ஜனவரி 2026. எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.10.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.