கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் 4,662 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தோ்வு கடந்த ஜூலை 12 -ஆம் தேதி நடைபெற்றது.

இதில் 13.89 லட்சம் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்த நிலையில், 11.48 லட்சம் போ் தோ்வு எழுதினா்.

இந்நிலையில், குரூப் 4 தோ்வுக்கான முடிவுகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியானது.

மேலும், கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கான அழைப்பு மற்றும் கலந்தாய்வு தேதி குறித்து விவரம் விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாக நான்கு மாதங்கள் ஆன நிலையில், இந்தாண்டு 102 நாள்களில் வெளியிடப்பட்டுள்ளது தேர்வர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

THE MARKS AND RANK POSITION FOR THE POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV (GROUP - IV SERVICES) EXAMINATION HELD ON 12.07.2025 F.N HAVE BEEN PUBLISHED.

மிஸ்பண்ணிடாதீங்க... தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அரிசிக்கும் வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை! புதின் வருகை எதிரொலியா?

அடுத்த 2 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்களில் மழை!

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT