கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(என்எல்சி) நிறுவனத்தில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்காக ஒரு ஆண்டு காலத்திற்கான 44 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்ற நிர்வாகிகளிடம் இருந்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive
பிரிவு: Operation
காலியிடங்கள்: 17
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிடிஜி, எஸ்எச்எஸ் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
பிரிவு: Maintenance
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.71,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Maintenance ofCivil, Boiler, Turbine, AHS, LHS -இல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 6.10.2025 தேதியின்படி 63-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Health Inspector
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ. 38,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Health Sanitation பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.854, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.354 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.10.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.