முகப்பு
அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!

Online applications are invited from the eligible applicants for engagement as Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster(ABPM)/Dak Sevak). 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:26 AM
பகிர்:

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமின் டாக் சேவா(கிராமிய தபால் ஊழியர்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Branch Postmaster (BPM)
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 29,380

பணி: Assistant Branch Postmaster (ABPM)
பணி: Gramin Dak Sevaks (GDS)
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470

மொத்த காலியிடங்கள்: 40,889. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.2.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.