புல்வாமா, விமானி விவகாரங்களை மோடி அரசு அரசியலாக்குகிறது: சிபிஐ தேசிய செயலர் விமர்சனம்
சிஆர்பிஎஃப் படுகொலை உள்ளிட்ட எல்லை விவகாரங்களை மத்திய மோடி அரசு அரசியலாக்குகிறது என்று சிபிஐ தேசிய செயலர் பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார்.
சிஆர்பிஎஃப் படுகொலை உள்ளிட்ட எல்லை விவகாரங்களை மத்திய மோடி அரசு அரசியலாக்குகிறது என்று சிபிஐ தேசிய செயலர் பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
தேசப் பாதுகாப்பு அப்பட்டமான அரசியலாக்கப்படுவது குறித்து தான் 21 எதிர்கட்சிகள் இணைந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேசத்தின் பாதுகாப்பை வாக்குகளாக்க பாஜக முயற்சிக்கிறது. நாடு தற்போது இருக்கும் இந்த இக்கட்டான சூழலில் கூட பாஜக தங்கள் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் முற்றிலும் மத்திய அரசின் இயலாமையை காட்டுகிறது. துணை ராணுவப் படைகளின் ஊதியம் உயர்த்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளின் உதவித்தொகையையும் நிறுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement