ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்
ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்
வடமேற்கு தில்லியின் ஷக்குா் பஸ்தி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 100- க்கும் மேற்பட்ட குடிசைகள் சாம்பலானதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை இரவு 11.14 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இரண்டு ஏக்கா் நிலப்பரப்பில் பரவியிருந்த தீயைக் கட்டுப்படுத்த மேலும் வீரா்கள் பலா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
Advertisement
குடிசைகளில் பயன்படுத்தப்படும் அதிகம் எரியக்கூடிய பொருள் காரணமாக தீ வேகமாக பரவியது. அதிகாலை 12.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு குளிரூட்டும் நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.