முகப்பு
ஆன்மிகம்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு - புகைப்படங்கள்

Updated On : 10 அக்டோபர், 2020 at 10:54 PM
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி தி.நகர் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
காலை முதலே கோவிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் கோவிலுக்குள் பூ மாலை, துளசி உள்ளிட்ட எந்த பொருட்களையும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Advertisement

சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனைகள் நடைபெற்றன.
மூலவர் முதல் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பக்தி பரவசத்தில் பக்தர்கள்.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலின் நுழைவுவாயிலில் பக்தா்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது.
முகக் கவசம் அணிந்த பக்தா்கள் மட்டும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
பக்தா்கள் முறையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் கோயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
பக்தா்கள் வரிசையாக கோயிலுக்குச் சென்று பெருமாளை வழிபட்டு சென்றனர்.
பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பெருமாளை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.