முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம் - புகைப்படங்கள்
DIN
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அடைக்கப்பட்ட கம்பம் கூடலூர் லோயர்கேம்ப் முருகன் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.ஊத்துக்கோட்டை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்த பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்கள் கோவிலின் வெளியிலேயே தீபம் ஏற்றி முருகனை வழிபட்டு சென்றனர்.தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது.ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் வேல்முருகன்.அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்.தைப்பூசத்தை ஒட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு மங்கல திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.மானாமதுரை ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் மூலவர் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்.தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் கோயிலில் தைப் பூச விழாவையொட்டி முருகன் வள்ளி தெய்வானை உற்சவ மூர்த்திக்கும், அம்மன், சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்.சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தைமாத உத்ஸவ பந்தகால் முகூர்த்தை, தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானத்தால் தொடங்கி வைத்தார்.