முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - புகைப்படங்கள்

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் திருக்கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில். பழமையும், வரலாற்று சிறப்பும் மிக்க இத் திருக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற தமிழக அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கியது. இதனை தொடர்ந்து திருக்கோயிலில் புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் திருக்கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில்.
பகிர்:
பழமையும், வரலாற்று சிறப்பும் மிக்க இத் திருக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற தமிழக அரசு ரூ. 18 கோடி நிதி ஒதுக்கியது.
கோயிலில் இன்று காலை பாலாலயம் நடைபெற்றது.
திருக்கோயில் ஸ்தல ஸ்தானீகர்களால் ஏழு யாக சாலைகள் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட கலசங்கள் வைத்து யாகசாலை பூஜை செய்யப்பட்டு இரண்டு காலை பூஜைகளும் நடைபெற்றன.
ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பாலாலயம் இன்று நடைபெற்றது.
முதற்கட்டமாக விகட சக்கர விநாயகர், பல்லவ கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர், விஷ்ணுவேஸ்வரர், ராஜ கோபுர விநாயகர், ராஜ கோபுர ஆறுமுகர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு பாலாலயம் நடைபெற்றது.
யாகசாலை முடிந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து வந்து திருக்கோவில் மூலவர் கருவறை முன்பு அமைந்துள்ள தெய்வங்களுக்கு பாலாலய அபிஷேகம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.