முகப்பு
லைஃப்ஸ்டைல்

மனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்

Updated On : 11 ஆகஸ்ட் 2020, 8:03 pm IST
கர்நாடக மாநிலம் கோபல் மாவட்டத்தில் விபத்தில் பலியான மனைவியின் மெழுகு சிலையை தயாரித்து புது மனை கிரகப்பிரவேசத்தை நடத்திய கணவர் ஸ்ரீரீனிவாஸ் குப்தாவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பகிர்:
இவரது மனைவி மாதவி கடந்த 2017ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
தனது மனைவியின் விருப்பப்படி அவரது கனவு இல்லத்தைக் கட்டி கிரகப்பிரவேசத்தை நடத்தியுள்ளார்.
பிங்க் வண்ணத்தில் புடவை அணிந்து சிரித்த நிலையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மனைவியுடன் ஸ்ரீனிவாஸ் குப்தா மற்றும் அவரது இரண்டு மகள்களும்.
எனது இல்லத்தில் என் மனைவி இருக்கிறாள் என்பது நெகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது என்றார் கணவர் ஸ்ரீனிவாஸ் குப்தா.
மனைவிக்கு பிடித்த பிங்க் நிற புடவை அணிவித்து அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மனைவியின் நினைவுடன் வாழ்ந்து வந்த அவர், மனைவியின் உருவத்தை மெழுகு சிலையாக அமைத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.