இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.
படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கிய நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளார்.அனிருத் இசையில், பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தின் நடிக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழு அறிவிப்பு.