'களத்தூர் கண்ணம்மா' தொடங்கி அன்று முதல் இன்று வரை 60 ஆண்டுகள் இந்திய சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமா அரங்கில் இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்தவர் கமல்.
பகிர்:
வழக்கறிஞரான டி.சீனிவாசன் - ராஜலக்ஷ்மி தம்பதிக்கு மகனாக பரமக்குடியில் பிறந்தார்.'களத்தூர் கண்ணம்மா' படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, கமலுக்கு வயது ஐந்து.இளைஞனாக 1970-ஆம் ஆண்டு வெளியான 'மாணவன்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார்.1974-ஆம் ஆண்டு வெளிவந்த, 'நான் அவன் இல்லை' திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.கே.பாலசந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்திற்காக கமலுக்கு 'ஃபிலிம் ஃபேர் விருதும்', 'தேசிய விருதும்' கிடைத்தது.'சிகப்பு ரோஜாக்கள்', 'வறுமையின் நிறம் சிகப்பு', 'நீயா', 'கல்யாண ராமன்', 'நினைத்தாலே இனிக்கும்', 'ராஜபார்வை', 'மூன்றாம் பிறை' ஆகிய படங்கள் பல விருதுகளைப் பெற வாய்ப்பாக அமைந்தன.ஹிந்தி திரையுலகத்தில் 'ஏக் துஜே கே லியே', 'சாகர்', 'ராஜ் திலக்', கிரஃப்தார்' கமல் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில.90-களில் வெளியான 'அபூர்வ சகோதர்கள்', 'குணா', 'தேவர் மகன்', 'மகாநதி', 'குருதிப்புனல்', 'இந்தியன்', 'அவ்வை ஷண்முகி' போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன.சினிமாத்துறையில் அவர் ஆற்றிய பணிக்காக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் வழங்கி கௌரவிப்பு.'மூன்றாம்பிறை', 'நாயகன்', 'இந்தியன்' ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றார் கமல்.தமிழில் நடிகர் சிவாஜி கணேசனுக்குப் பின் செவாலியே விருது பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றவர்.தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் 'மய்யம்' என்ற பத்திரிகையை வெளியிட்டார்.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை பேசுவதில் வல்லவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகள் சினிமாத்துறைக்காக அர்பணித்த மனிதர்களில் கமலும் ஒருவர் என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது.