முகப்பு
நிகழ்வுகள்

42-ஆவது சென்னை புத்தகக் காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் 42-ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது.  இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு புத்தக விற்பனையைத் தொடக்கி வைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் முதன் முறையாக சென்னைப் புத்தகக்காட்சியில் கலந்து கொண்டது. பினாக்கிள் புக்ஸ் புத்தகக் காட்சி விழாவில் எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் பொதுமேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தினமணி டாட் காம் இணை ஆசிரியர் ஆர். பார்த்தசாரதி, எழுத்தாளர் பா.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜனவரி 4 முதல் 20-ம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →