தமிழகத்தில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், நெல்லை, கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிரகணம் தெரிந்தது.பூமிமை சூரியனை சுற்றி வரும், இதேபோல் நிலவு பூமியை சுற்றி வருகிறது. இந்நிலையில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நிலவு இருக்கும்.சூரிய ஒளியை நிலவு மறைத்துக் கொள்வதால் அதன் நிழல் பூமியில் தென்படும். இதனை நாம் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.
Advertisement
Advertisement
சென்னையை பொறுத்தவரை 34 சதவீதம் கிரகணம் மட்டுமே தெரியும்.சென்னையில் காலை 10:22 மணிக்கு தொடங்கும் கிரகணம் மதியம் 1.41 மணிக்கு முடியும்.உச்சகட்ட கிரகணம் பகல் 11:58 மணிக்கு நிகழும்.
எக்காரணம் கொண்டும் வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்க கூடாது.வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்கும் போது கண் பாதிப்பு அல்லது கண் பார்வை இழப்பு ஏற்பட வாய்புள்ளது.சூரிய கிரகணத்தை சூரிய கண்ணாடி போன்றவற்றின் துணைக் கொண்டு பார்க்க வேண்டும்.
சூரிய கிரகணத்தை தொலைநோக்கி போன்றவற்றின் துணைக் கொண்டு பார்க்க வேண்டும்.சூரிய கிரகணத்தை கண்களால் மக்கள் யாரும் பார்க்கக் கூடாது.சென்னையை பொறுத்தவரை 34 சதவீதம் மட்டுமே கிரகணம் தெரியும்.
சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் கோவில்களில் நடை சாத்தப்படுகிறது.சூரிய கிரகணம் காலை 10.16 மணி என்பதால் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது.கரோனா தொற்று அதிகம் இருப்பதால் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது
சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் சுத்தப்படுத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.சூரியனை நிலவால் முழுவதுமாக மறைக்க இயலாது.உச்ச கட்ட கிரகணத்தின் போது மறையாத சூரியனின் விளிம்பு பகுதிகள் நெருப்பு வளையம் போல் சந்திரனை சுற்றி இருக்கும்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், நெல்லை, கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிரகணம் தெரிந்தது.2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம். இந்த நிகழ்வு காலை 9:15 மணிக்கு தொடங்கி 3:04 PM IST வரை நிகழ்ந்தது.