கார்த்திகை தீபத் திருநாளையொட்டி கிராமத்திலிருந்து களிமண் கொண்டுவரப்பட்டு, மண் சேர்த்து பதமாக குழைத்து, அகல் விளக்கை தயாரிக்கின்றனர்.
முன்னோர்கள் ஈடுபட்ட தொழில் என்பதால் எக்காரணம் கொண்டு விட்டுவிடக்கூடாது என்பதற்காக பாரம்பரியமாக ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.கார்த்திகை தீபம் என்றாலே மங்களகரமான தீபம் ஏற்றுவதுதான்.நாகரிக உலகில் மக்களை கவரும் வகையில் மண் அகல் விளக்குகளுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை.இயந்திர உதவியின்றி கைகளால் தயார் செய்யப்பட்டு வரும் அகல் விளக்குகள்.தற்போதைய நிலையில் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட விளக்குகள்.மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற ஐதீகம் காரணமாக பெயரளவில் மட்டுமே விளக்குகள் விற்பனையாகிறது.