முகப்பு
செய்திகள்

கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர்

நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து. அதன் பின், முப்படை மற்றும் காவல் துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி வீரதீர செயலுக்கான விருதுகளை வழங்கினார். விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →