100 வது பிறந்தநாள்... இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் நினைவுகள்!
இந்திய இயற்பியலாளரான விக்ரம் சாராபாய் அகமதாபாத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் நினைத்திருந்தால் ஒரு தொழிலதிபராகி இருக்கக் கூடும் ஆனால், அவரது ஆர்வம் கணிதம் மற்றும் இயற்பியலில் இருந்ததால் அதை நோக்கி ஈர்க்கப்பட்டார். இன்று இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை யார் எனக் கேட்டால் யார் வேண்டுமானாலும் சொல்வார்கள் அது விக்ரம் சாராபாய் என்று! அந்த அளவுக்கு அத்துறையில் சாதனைகள் பல புரிந்து விருதுகள் பலவற்றைக் குவித்தவர் அவர். அவரது 100 ஆவது பிறந்த நாளை கடந்த ஆகஸ்டு 12 ம் தேதி டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்து கொண்டாடியது கூகுள்... அவரது அரிய புகைப்படங்களில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய்
பகிர்:
இளம் வயது விக்ரம்... தன் பெற்றோருடன்...குழந்தைகளுடன் ஒரு இனிய தருணத்தில்...மனைவி மற்றும் குழந்தைகளுடன்...பண்டித நேருவுடன்...சக விஞ்ஞானிகளுடன்...இந்திரா காந்தியுடன்...சக விஞ்ஞானிகளுடன்...விண்வெளி ஆராய்ச்சி குறித்த தீவிர விவாதத்தில்...ராக்கெட் லாஞ்சிங் தளத்தில் விளக்கம் அளிக்கும் விக்ரம் சாராபாய்...மிகத் தீவிரமாக ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விக்ரம் சாராபாய்...விஞ்ஞானிகள் சந்திப்பில்...சிறப்புரை ஆற்றுகிறார்...அயல்நாட்டு விஞ்ஞானிகளுடன் ஒரு கலந்துரையாடல்..இந்திரா பிரதமரான பின் அவருடன்...இந்திராவுடன்...இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளின் எதிர்காலம் குறித்த தீவிரமான யோசனையில் லயித்திருக்கும் விக்ரம் சாராபாய்...விக்ரம் சாராபாயின் ஆய்வு விளக்கத்தை உற்றுக் கவனிக்கும் நேரு...இசையார்வமும் உண்டு... இசைக் கலைஞருக்கு அன்பளிப்பு...நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர் சி வி ராமனுடன் ...விண்வெளி ஆய்வில் இந்தியா அடைந்திருக்கும் வெற்றிகளை அன்றே தூரதிருஷ்டியில் காண முயற்சிக்கிறாரோ?!விண்ணில் நட்சத்திரமாய் ஒளி விடும் நோக்கில் மறைந்தார் விக்ரம் சாராபாய்...மறைவுக்குப் பின் விக்ரம் சாராபாய்க்கு அளிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதைப் பெற்றுக் கொள்கிறார் அவரது மனைவி!