பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் ஏவுவதற்காக நேற்று பிற்பகல் 2.41 முதல் கவுண்ட் டவுன் தொடங்கியது.சரியாக மாலை 3.41 மணிக்கு பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் இஓஎஸ்-1 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாகச் விண்ணில் பாய்ந்தது.இந்தத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மூலம் சி-பேண்ட் அலைவரிசையைப் பெற முடியும்.1.400 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 செயற்கைகோள் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் காலம் முடிந்ததையடுத்து, இந்த செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது.பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வெற்றிகரமாக பூமியின் நீள்வட்டப் பாதையில் சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளானது அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.கல்வி, மருத்துவம் ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.